Friday, 29 January 2016

பேகூர் சிவன் கோயில் கங்கர்கள் நடுகல்

நடுகல் வரிசை-81
இடம்-பேகூர் சிவன் கோயில்
கங்கர்கள் நடுகல் 
ஆடு மேய்க்கும் போது ஏற்பட்ட பூசலில் போர்வீரன்
இறந்து போயிருக்க வேண்டும்
வலது கையில் போர்வாளும்
இடது கையில் கேடயமும் இருக்கிறது
வலது புரம் கன்னடத்தில் கல்வெட்டு வாசகமும் இருக்கிறது
14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது
-அறம் கிருஷ்ணன்


Friday, 22 January 2016

வசந்த் டீவியின் "மண்பேசும் சரித்திரம்" நிகழ்வில்

இன்று (23.01.16) இரவு -9மணிக்கு
வசந்த் டீவியின் "மண்பேசும் சரித்திரம்" நிகழ்வில்
முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாற்று பதிவுகள்.
மல்லசந்திரம் கற்திட்டைகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் 
திரு .சுப்பிரமணியன் பேசுகிறார்.
மல்லசந்திரம் பாறை ஒவியங்கள் குறித்து வரலாற்று ஆர்வலர்
திரு.அறம் கிருஷ்ணன் பேசுகிறார்.
மற்றும் பெண்ணேஸ்வரமடம் நடுகற்கள்..குறித்து தொல்லியல் ஆய்வாளர் திரு .சுகவணமுருகன் பேசுகிறார்.
வரலாற்று பதிவுகளை தொடர்ந்து திறம்பட செய்து வரும்
மண்பேசும் சரித்திரத்தின் இயக்குனர் திரு.முத்துகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு
மற்றும் அறம் இலக்கிய அமைப்பு
அனைவரும் பாருங்கள்.மேலான கருத்தை தெரிவியுங்கள்
-அறம் கிருஷ்ணன்





Tuesday, 12 January 2016

அறம் கிருஷ்ணன் அகவை ஐம்பது - கடந்து வந்த பாதை

முக நூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நாளை(13.01.16) ஐம்பதாவது பிறந்த நாள்
அனைவரும்
வாழ்த்துங்கள்
வளர்கிறோம்
அறம் கிருஷ்ணன்
அகவை ஐம்பது -
கடந்து வந்த பாதை
அதற்குள் வந்து விட்டது
அரை நூற்றாண்டின் தொடக்கம்
காலபெருவெளியை
கடந்து வருவதற்குள்
நூறாண்டில் பாதி கரைந்தே போனது
திரும்பி பார்க்கிறேன்
கடந்து வந்த பாதை முழுவதும்
ரணமும், ரௌத்திரம் இறைந்தே கிடக்கிறது
எங்கிருந்து தொடங்கியது இந்த வாழ்க்கை
பிறந்தது ஒரிடம், வளர்ந்தது ஒரிடம்
கல்வி, திருமணம், வேலை ,
எல்லாம் வெவ்வேறு இடத்தில்
70 ல் தொடக்கப்பள்ளி
82- ல் பத்தாம் வகுப்பு இறுதி
84 -ல் பன்னிரண்டாம் வகுப்பு
88 ல் பாலிடெக்னிக் படிப்பு முடிந்தது
அதே ஆண்டில் அப்துல்ரகுமான் முன்னுரையோடு “அழகின் தாகம்” கவிதை நூல் வெளியீடு
89 -ல் ஒசூரில் வேலை தேடி அலைய தொடங்கியது
90-ல் "நந்தவனம் "சிற்றிதழ் தொடக்கம்
91-ஆம் ஆண்டு வரை உண்வுக்கும், உடைக்கும் பெரும் போராட்டம்
91-ல் வைரமுத்துவின் முன்னுரையோடு “பூகம்ப விதைகள்” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு
93 ஆம் ஆண்டு திருமணம்
94 – ஆம் ஆண்டு மகள் பிறப்பு
95 – ஆம் ஆண்டு மகன் பிறப்பு
2000 ஆம் ஆண்டில் புதிய நிறுவனத்தில் வேலை தொடக்கம்
2004 ஆம் ஆண்டில் மீண்டும் புதிய நிறுவனத்தில் வேலை தொடக்கம்
2009 ஆம் ஆண்டில் நண்பரோடு சேர்ந்து புதிய தொழிற்சாலை தொடக்கம்
2015 ஆம் ஆண்டில் அறம் இலக்கிய அமைப்பு , அறம் சமூக சேவை, தொடக்கம்
2015 ஆம் ஆண்டில் மூன்றாவது புத்தகம் திரு.பாலகுமாரன் அவர்களால் “இராசேந்திர சோழன் அரிய தகவல்கள்-1001” நூல் வெளியீடு
2016 –01-15 ஆம் நாளில் இரண்டாவது தொழிற்சாலை தொடங்க இருக்கிறோம்
முல்லைதாசனாய் இருந்தவன் தடம் மாறி
வரலாற்றை நேசிக்க தொடங்கி ..
இப்போது அறம் கிருஷ்ணனாக
அடையாளப் பட்டிருக்கிறேன்
-அறம் கிருஷ்ணன்











Sunday, 10 January 2016

கர்நாடாகவில் சோழர்கள் கட்டிய கோவில்களை தேடி முதல் பயணம்.
பொம்மனள்ளிக்கு அருகில் பேகூர் என்ற இடத்தில் இருக்கிறது.
10-ஆம் நூற்றாண்டில் இராசேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயில்.
சோழர்கால கட்டிட காலையை ஓட்டி கட்டப்பட்ட கற்கோயில்
கோபுர கலசம் கூட கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இக்கோயிலுக்கு முதலில் இருந்த பெயர் பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்.இப்போது நாகேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
நாகேஸ்வரர்
சோழஸ்வரர்
காலிகம்டெஸ்வரர்
நகரஸ்வரர்
கருனேஸ்வரர்
மேற்கண்ட ஐந்து பெயர்களில் கோயில் உள்ளது
ஐந்து நந்திகள் உள்ளன.
தமிழ் கல்வெட்டுகள் நிறைய இருக்கின்றன
கன்னட மொழியில் எழுதப்பட்டகல்வெட்டு சாசனம் உள்ளது.
-அறம் கிருஷ்ணன்






Thursday, 7 January 2016

சோழர் கால கல் தூண்


சோழர் கால கல் தூண்
அறுபது அடிக்கு குறையாத உயரம்
இங்கே இருக்கும் மக்கள் இதை கருட கம்பம் என்று அழைக்கிறார்கள்
800 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் மிகப்பெரிய கோயில் இருந்திருக்க வேண்டும்.அதற்காண அடையாளங்கள் அப்படியே இன்னும் இருக்கின்றன.
இடம்-தளிக்கு அருகிலிருக்கும் கும்ளாபுரம்
வரலாற்று சிறப்பு மிக்க ஊர்
இந்த ஊர் முழுவதுமே இப்படிதான் வரலாற்று எச்சங்கள்
அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
-அறம் கிருஷ்ணன்





Saturday, 2 January 2016

அறுபத்துமூன்று நாயன்மார்கள்.

அறுபத்துமூன்று நாயன்மார்கள்.
இராசேந்தி சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயில்
ஒசூர் சந்திர சூடேஸ்வரர் கோயிலில் உள்ள 
திருஞான சம்பந்தர்
அப்பர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
-அறம் கிருஷ்ணன்





தெலுங்கில் கல்வெட்டு உள்ளது

நடுகல் வரிசை எண்-56
குதிரையின் மேல் போர் வீரன்
கீளே இரண்டு பெண் சிற்பங்கள்
அதில் ஓன்று குறுக்காக உள்ளது.
தெலுங்கில் கல்வெட்டு உள்ளது
முடிந்தவர் படித்து சொள்ளுங்கள்
இடம்-கும்ளாபுரம் தளிக்கு அருகில் உள்ளது
-அறம் கிருஷ்ணன்


Friday, 1 January 2016

காளையை அடுக்கும் வீரண்.

நடுகல் வரிசை எண்-55
காளையை அடுக்கும் வீரண்.
இந்த வருடத்தின் முதல் தகவலாக இதை பதிவிடுகிறேன்
தமிழ் நாட்டின் எல்லைநகரம் கும்ளாபுரம்
தெலுங்கு, தமிழ் , கன்னடம் , மூன்றும் கலந்து பேசும் மக்கள்
மாடு பிடி வீரணின் நடுகல்
ஆக்றோசமாக பாய்ந்து வந்த காளையை ஓருவீரன் இரண்டு கொம்புகளையும் பிடித்து தடுத்து நிறுத்து போல் உள்ளது
காளையை அடுக்கும் வீரண்.
14 ஆம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது
முன்னாடி இருக்கும் அம்மன் சிலை மறைத்து இருப்பதால்
சரியாக புகைப்படம் எடுக்க முடியவில்லை.
இந்த கோயிலின் முன்புரம் மண்டுஇருக்கிறது.ஓவ்வோரு வருடமும் கூலிகளை கட்டி ஊரப்பம் விழா எடுப்பதாக அவ்ஊர்
மக்கள் தெரிவித்தார்கள்.
கூலிகளை கட்டி வைப்பதற்காண இரண்டு கல்தூண்களையும்
காணமுடிந்தது.அந்த கல்தூண்களில் ஓருகுறியிடு இருக்கிறது
இந்த நடுகல் காளையை அடுக்கும் போது இறந்து போண ஓரு வீரணின் நினைவு கல்லாகதான் இருக்க முடியும்
எப்போது உணர போகிறது மத்திய அரசு?
தமிழர்களின் வாழ்க்கையோடும் ,
தமிழர்களின் வரலாறோடும் சேர்ந்தே பிறந்தது இந்த
வீர விளையாட்டு.
-அறம் கிருஷ்ணன்