Friday, 13 November 2015

மூன்றாம் இராஜராஜன் சோழன் கல்வெட்டு...

மூன்றாம் இராஜராஜன் சோழன் கல்வெட்டு.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு(1233)
கல்வெட்டு செய்தி
."ஸ்ரீ இராராசதேவரற்கு யாண்டு ரு வது பைய்யூர் நிலை
உடைய மதுராந்தக வீரநுளம்பன் வையிரவன் வீமனேன்
பெண்ணைநாயினார் கோ(யி)ல் சிவபிஹணர் (செம்)பூண்டி
யாழ்வான் மகன் பெண்ணையாழ்வான் நாற்பத்தெண்ணாயிரப்
பட்டனுக்கு என்னேரி தட்டான் குட்டைக்கு அஞ்சு உதாரனும்
அஞ்சு சுத்த சலாகையும் ஆகப் பத்துபொன் அறக்கொண்டு மண்ணறக்குடுத்துத் திருச் சூலக்கல்லு நாட்டிக் குடுத்தேன்
வையிரவன் வீமநனேன்"
கல்வெட்டு விளக்கம்
மூன்றாம் இராஜராஜன் சோழனின் பதினைந்தாவது ஆட்சி
ஆண்டில் மதுராந்தக வீரநுளம்பன் வையிரவன் வீமன் என்பவன்
பெண்ணைநாயினார் கோயிளின் சிவபிராமணர் நாற்பத்தெண்ணாயிரப்பட்டன் என்பவரிடம் அஞ்சு உதாரனும்,
அஞ்சு சுத்த சலாகை என இருவகையான பத்துபொன்
பெற்றுகொண்டு தன்னுடைய தட்டான் குட்டை ஏரியை
சூலக்கல் நாட்டிற்கு தானமாக கொடுத்ததை இக் கல்வெட்டு.குறிப்பிடுகிறது.
இந்த செய்தி கோயிலின் கருவறை வடக்குப் பட்டிகையில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.



Thursday, 12 November 2015

மூன்றாம் இராஜராஜன் சோழன் கல்வெட்டு.

மூன்றாம் இராஜராஜன் சோழன் கல்வெட்டு.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு(1233)



கல்வெட்டு செய்தி
."ஸ்ரீ இராராசதேவரற்கு யாண்டு ரு வது பைய்யூர் நிலை
உடைய மதுராந்தக வீரநுளம்பன் வையிரவன் வீமனேன்
பெண்ணைநாயினார் கோ(யி)ல் சிவபிஹணர் (செம்)பூண்டி
யாழ்வான் மகன் பெண்ணையாழ்வான் நாற்பத்தெண்ணாயிரப்
பட்டனுக்கு என்னேரி தட்டான் குட்டைக்கு அஞ்சு உதாரனும்
அஞ்சு சுத்த சலாகையும் ஆகப் பத்துபொன் அறக்கொண்டு மண்ணறக்குடுத்துத் திருச் சூலக்கல்லு நாட்டிக் குடுத்தேன்
வையிரவன் வீமநனேன்"
கல்வெட்டு விளக்கம்
மூன்றாம் இராஜராஜன் சோழனின் பதினைந்தாவது ஆட்சி
ஆண்டில் மதுராந்தக வீரநுளம்பன் வையிரவன் வீமன் என்பவன்
பெண்ணைநாயினார் கோயிளின் சிவபிராமணர் நாற்பத்தெண்ணாயிரப்பட்டன் என்பவரிடம் அஞ்சு உதாரனும்,
அஞ்சு சுத்த சலாகை என இருவகையான பத்துபொன்
பெற்றுகொண்டு தன்னுடைய தட்டான் குட்டை ஏரியை
சூலக்கல் நாட்டிற்கு தானமாக கொடுத்ததை இக் கல்வெட்டு.குறிப்பிடுகிறது.
இந்த செய்தி கோயிலின் கருவறை வடக்குப் பட்டிகையில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.

Saturday, 7 November 2015

என்ன நினைத்திருக்கும் அந்த உயிர்.

இன்று காலையிளிருந்து எல்லோர் மனதையும் வசப்படுத்தி வைத்திருந்த இந்த சிட்டுகுருவி சற்றுமுன் இறந்துவிட்டது.
அதன் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிராத்தனை செய்வோம்.
நான் தொடர்ந்து பதிவுகள் எழுதிவருகிறேன் .இதுவரை எந்த பதிவும் இவ்வளவு பேர் விருப்பம் தெரிவித்ததில்லை.
இதுவரை சுமார் 300 பேர் வரை விரும்பி கருத்து தெரிவித்து
வருகின்றனர்.
கருத்துகளை பதிவு செய்தவர்களுக்கும்
விருப்பத்தை பதிவு செய்தவர்களுக்கும் மிக்க நன்றி.
இரவெல்லாம் தூங்காமல் செய்த இந்த சிட்டுகுருவி
இப்போது மறக்கமுடியாத வலியை ஏற்படுத்திவிட்டது.
இன்று மதியம் கூட அதன் இறகுகளை மென்மையாக வருடியபோது அதன் பயம் நீங்கி தலையை தூக்கி என்னைப்பார்த்தது.அந்த பார்வை அப்போது எனக்கு புரியவில்லை.
இப்போதுதான் புரிகிறது.அடைகலம் கொடுத்தமைக்கு நன்றியா..?
இல்லை போய்வருகிறேன் என்று சொல்லியிருக்குமோ.
என்ன நினைத்திருக்கும் அந்த உயிர்.
இப்போதுதான் மனசு தடுமாறுகிறது.அதை காப்பாற்ற தவறி விட்டோமோ என்று.
எல்லாவற்றிக்கும் மருத்துவமனை இருக்கும்போது.
இந்த பறவைளுக்கு இல்லாமல் போனது எப்படி?
சிறு உயிர்களை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும்அனைவரும் முன் வாருங்கள்.

ஓரு நிமிடம் அந்த சிட்டுகுருவிக்காக பிராத்தனை செய்யுங்கள்
அதன் ஆன்மா சாந்தியடையட்டும்
-அறம் கிருஷ்ணன்.

Thursday, 5 November 2015

இயற்க்கையின் படைப்பில் சிட்டுகுருவிகள் ஓரு அதிசயம்.

எங்கள் வீட்டின் முன்புறம் 200 சிட்டுகுருவிக்கு மேல் தினமும் உணவுக்கு வருகின்றன.நாள்முழுவதும் அங்கேயே இருக்கும்
கடந்த இரண்டு வருடமாகவே இப்படிதான்.
ஆனால்
நேற்று ஓரு சிட்டுகுருவி வீட்டுக்குள் வந்து ஒடி வந்தது.
பறக்கமுடியாமல் தவித்தது.கையில் பிடித்து பார்த்தப்போது
தலையில் கண்ணுக்கு அருகில் அடிப்பட்டிருந்தது.பூனையோ, அல்லது எலியிடமோ பிடிப்பட்டு தப்பித்திருக்க வேண்டும்.
பகல்முழுவதும் வைத்திருந்து இரவு அதன் தாய்குருவிகளிடம்
சேர்த்துவிட்டோம்.ஆனால் இரவு முழுவதும் எங்களுக்கு உறக்கம்
இல்லை.காரணம் மீண்டும் பூனையிடம் அகப்பட்டுவிடுமோ என்ற
பயம்.அதுக்கேற்றார்போல் பூனை ஒன்று காத்திருந்தது.
விடிந்தவுடன் முதல் வேலையாக நானும் மனைவியும் தேடினோம்.மனைவிவியின் கண்ணுக்கு தெரிந்துவிட்டது.
பிடித்துவந்து வீட்டில் வைத்திருக்கிறோம்.இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி.அதன்சிறகுகளை தடவிகொடுக்கும் போது
பேரானந்தம்.வெகு நேரம் என் கைகளை விட்டு இரங்கமருத்தது.
இயற்க்கையின் படைப்பில் சிட்டுகுருவிகள் ஓரு அதிசயம்.
சிரு உயிர்களை நேசியுங்கள்.எதனினும் கிடைக்காத மகிழ்ச்சி
அங்கேதான் மறைந்திருக்கிறது.
-அறம் கிருஷ்ணன்.






இறைவனே பேசும் கல்வெட்டு



இறைவனே பேசும் கல்வெட்டு
கி.பி. 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ தண்டீசுரன் ஒலை தாபரஞ்சூழ் வைய்யத்து ச
ண்டீசன் தன் கருமம் ஆராய பண்டே யறஞ் செய்தான் செய்தா
ன் அறங்காத்தான் பாதம் திறம்பாமல் சென்னி மேல் வைத்து
நம்முடைய
பத்தன் கத்தாரியில் இருக்கும் வெள்ளாழரில் மாங்குடையான் முத லிப்பிள்ளை உலகன் சித்திரை திருநாளில் நம்முடைய
ஆறாந்திருநாள் சந்திரா
தித்தவரை நடத்த கடவனாகவும் நடத்தி ஓடுக்கும் வரிசையும்
பெற
க்கடவ
தாகவு(ம்)."
கல்வெட்டு விளக்கம்
தொடக்கத்தில் உள்ள வெண்பா பாடல் ஆதிசண்டேஸ்வரரை புகழும் படி உள்ளது.
இந்த வெண்பா பாடல் இறைவனே பேசுவதுபோல் உள்ளது.
இந்த கோயிலின் சித்திரைத் திருவிழாவில் ஆறாம் நாள் விழாவை கத்தாரி ஊரில் இருக்கும் வெள்ளாழனும்,
முதலிப்பிள்ளை உலகனுமான ஓரு பக்தன் தொடர்ந்து விழா
நடத்தவும், அவனுக்கு உரிய கோயில் மரியாதைகளை வழங்கவும், இறையானை வழங்கப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது.
இந்த செய்தி கோயிலின் தென்புறம் திருச்சுற்றுச்சுவரில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.


Wednesday, 4 November 2015

மூன்றாம் குலோத்துங்க சோழன்



மூன்றாம் குலோத்துங்க சோழன்
கி.பி. 1207 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்தங்க சோழனின் 29 ஆம் ஆட்ச்சியாண்டில் கொடுக்கப்பட்ட தானம்.
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீதிரிபுவநச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்ததுங்க சோழதேவற்கு யாண்டு இருபத்தொன்பதாவது முத்தையூரிலிருக்கும் வியபாரி(பரம்) பன் பேராயிரமுடையாநேன்
ஆளுடையார் பெண்னை(யாழ்வா)ருக்கு திருநுந்தா விளக்கும்
எறும்ப காணியும் வச்சேன்(பேரா)ண்டையேந்...."
கல்வெட்டு விளக்கம்
நூற்றாண்டில் மூன்றாம் குலோத்தங்க சோழனின் 29 ஆம் ஆட்ச்சியாண்டில் பெண்னை நாயனாருக்கு முத்தையுரைச் சேர்ந்த பேராயிரமுடையான் என்ற வியாபாரி நந்தா விளக்கு எரிப்பதற்காக நிலம் கொடுத்ததை குறிக்கிறது.
முத்தையூர் என்பது இப்போது முத்தூர் என்றழைக்கும் ஊராக இருக்கலாம்.
எறும்ப காணி என்பதுதான் என்னவென்று புரியவில்லை.
இந்த செய்தி கோயிலின் முகமண்டபத்தின் நுழைவாயிலின்
வலது புறம் குமுததில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.




Tuesday, 3 November 2015

மதுராந்தக வீர நுளம்பன் கொடுத்த நிலதானம்



மதுராந்தக வீர நுளம்பன் கொடுத்த நிலதானம்
வீரநரசிங்கன்-13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ வீர ந(ர)சிங்க தேவனுக்கு இயாண்டு யிரு வது பையூர்
நிலை உடைய மதுராந்தக வீர நுளம்பன் வையிரவன் விமலனேன் பெண்னை நாயனார்க்கு இவர் பணமும் நெல்லும்
அவரை மாச்சிய.......
த்தளவும் திரள் மாவுக்குக் கிழக்கும் ஆண்பி(ள்)ளை பெருமாள்
கொல்லையும் குரவாண்டை கொல்லையும் தட்டான் குட்டையும் மாதேவன் கொல்லையுமகப்பட விட்டு கொடுத்தோம்...
ல்லை சிறுக்கன் கொல்லையும் மேலை(மடை)யும் புளிய
மடை கட்டி கொள்ளக் கடவராகவும் (ஆ)க கொ....""
கல்வெட்டு விளக்கம்
மதுராந்தக வீர நுளம்பன் வையிரவன் விமலனேன் என்பவன்
பெண்னை நாயனார் கோயிலுக்கு பணமும், நெல்லும்,மற்றும் நிலதானம் அளித்ததை பற்றி குறிப்பிடுகிறது.
நித்தின் எல்லைகளா திரள் மாவுக்குக் கிழக்கும்.
ஆண்பிள்ளை பெருமாள் கொல்லையும்
குரவாண்டை கொல்லையும்
மாதேவன் கொல்லையும்
சிறுக்கன் கொல்லையும்
தட்டான் குட்டையும்
புளியமடை
மேலை மடை
போன்ற இடங்களை எல்லாம் விட்டு கொடுத்துள்தாக கூறப்படுகிறது.
இதில் தட்டான் குட்டை மட்டும் ஏரியாக இருக்க வாய்ப்புள்ளது.
பணமும், நெல்லு, கொல்லை , போன்றவார்த்தைகள் அப்போதே பயன்பாட்டில் இருந்துள்ளது.இப்போதும் அதே வார்த்தைகள் தான் பயன்பாட்டில் இருக்கிறது .
இந்த செய்தி கோயிலின் முகமண்டபத்தின் நுழைவாயிலின்
வலது புறத்தில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.


Monday, 2 November 2015

நூறு குழி நிலம் தானம்


நூறு குழி நிலம் தானம்
13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
கல்வெட்டு செய்தி
.".கதவனநாயன தேவாரபள்ளி பெரிய...நுந்தா விளக்குக்கு னு
று குழி குடுத்தேன் உடையார் பெண்னை னாயினாற்கு.."
கல்வெட்டு விளக்கம்
பெண்னை நாயினாற்கு நந்தா விளக்கு எரிப்பதற்காக கதவனநாயன தேவாரபள்ளியைச் சேர்ந்தவள் நூறு குழி நிலம் கொடுத்ததை குறிக்கிறது.
தேவாரபள்ளி என்ற ஊர் இப்போது தேவரஅள்ளி என்று அழைக்கும் ஊராக இருக்கலாம்.
இந்த செய்தி கோயிலின் கருவரையின் வடக்குபுறம் நான்முகனுக்கு கீழ் குமுதத்தில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.

இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி



இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள இந்த கல்வெட்டில்
முதல் வரியில் இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி தொடங்குகிறது.
"... திருமகள் பொல பெருநில செல்வியும்....."
போல என்ற வார்த்தை .'பொல ' என்றே கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓரு நிமிடம் மனசு துள்ளி குதித்தது.
காரணம் இந்த கல்வெட்டை பார்த்தவுடனே திருமகள் என்றே வார்த்தையை படித்துவிட்டேன்.

குலோத்துங்க சோழத் தகடா தராயன்



குலோத்துங்க சோழத் தகடா தராயன்
ஆண்டு-கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ குலோத்துங்க சோழத் தகடா தராயன்
தியாகப்பெருமாள் பெண்னை நாயனார்க்கு திருவிளக்குக்கு
விட்ட பசு இருபது இஷ மொன்று"
கல்வெட்டு விளக்கம்
குலோத்துங்க சோழத் தகடா தராயன் என்ற தியாகப்பெருமாள் பெண்னை நாயனார்க்கு திருவிளக்குக்காக இருபது பசுவும்
ஓரு எருதுவும் தானமாக கொடுத்ததை குறிக்கிறது.
இந்த செய்தி கோயிலின் கருவரையின் வடக்குபுறம் நான்முகனுக்கு கீழ் குமுதத்தில் உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.