Thursday, 31 March 2016

புங்கமரம். இது இளவேனிற்காலம்

புங்கமரம்.
இது இளவேனிற்காலம்
சருகுகள் முழுவதும் உதிர்ந்து புதியதாக துளிர்க்கும்
ஏழு நாட்களுக்குள் எவ்வளவு மாற்றம்.
எனது சிறுவயதில் இந்த புங்கமரங்களோடடே சேர்ந்து வளர்ந்தவன் நான்.எனது தந்தை இருநூறு மரங்களுக்கு மேல் வளர்த்தார்.இந்த இலைகளைதான் கழனிக்கு உரமாக போடுவார்.
இந்த மரத்தின் இலைகள் உரமாகிறது.
சருகுகளை மக்கவைத்து அதுவும் அடி உரமாகிறது.
இதன் காய்கள் எண்ணைய்யாக பயண்படுகிறது
இதன் நிழலில் இரண்டு நிமிடங்கள் நின்று ஓய்வெடுத்து
பாருங்கள்.உலகம்மறந்து போகும் அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்.எழுந்துபோகவே மனசு வராது.
-அறம் கிருஷ்ணன்








No comments:

Post a Comment