Wednesday, 30 December 2015

குதிரை குத்தப்பட்டான் நடுகல் சின்ன கொத்தூர் நடுகல்

குதிரை குத்தப்பட்டான் நடுகல்
சின்ன கொத்தூர் நடுகல்
இப்போது கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் இருக்கிறது
14 ஆம் நூற்றான்டு நடுகல்
வீரனின் வலது கையில் குத்துவால் இருக்கிறது
இடது கையில் உள்ளவாளால் குதிரையை குத்தும் நிலையில் உள்ளான்.இடையில் குறு வாள் இருக்கிறது
சிற்பத்திற்கு மேலே தமிழ் கல்வெட்டு இருக்கிறது.
கல்வெட்டு செய்தி
".....ஸ்ரீ பூர்வாதியார் குமரணானச் சக்கர சி
றுப்பி.ள்ளைகளில் சொக்கத் கருவாயன் பள்
ளி இடு பூசலில் குதிரை குத்தி பட்டான்.."
கல்வெட்டு விளக்கம்
பூர்வாதியார் என்பவருடை பிள்ளைகளில் சொக்கன் என்பவன் பூசலில் ஈடுபட்டு
குதிரையை குத்தும்போது இறந்து போய்யிருக்கிறான்.இந்த போர் நடந்த இடம் கருவாயன் பள்ளியாக இருக்க வேண்டும்.
-அறம் கிருஷணன்.

No comments:

Post a Comment