கி.பி.16 -அம் நூற்றாண்டு கல்வெட்டு
ஓசூர்-தேர்பேட்டை
ஓசூர் மலைக்கோயில் எனவும், சந்திரசூடேசுவரர் திருகோயில் எனவும், அழைக்கப்படும் இக்கோயிலின் பழைய பெயர் சேவிடை நாயினார் ஆகும்.
கி.பி 11 -ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே சேவிடை நாயினார் என்றே எல்லா கல்வெட்டுகளும் பதிவு செய்துள்ளன.
"ஆனந்த வருஷம் ..கார்த்திகை மாதம்......
..ஸ்ரீ மேலை திருச்சிற்றம்பலம் உடையார்.
..சேவிடை நாயினார் மாடாதிபதிகளும்,
..மாஹோஸரரும், நம்பிமாரும்,
..ஸ்ரீ வீரபத்திரரும், வீர சோழ வணுக்கரும்,
..பழவாசாரிகளும், சிப்பாசாரிகளும்,
..அரியப்ப சீயற்கு கல்லு வெட்டிக் கொடுத்தபடி..
..............................................................................
................................................................
...முரசூர் ............................
அனைவரையும் கூட்டி இந்த தானத்து..
.....
அரியப்பசீயர் என்பவருடை நிலம் அவர் ஊரில் இல்லாத போது கோயில்நிலமாக மாற்றப்பட்டது. பிறகு அவர் திரும்பி வந்தவுடன் அந்த நிலம் அவருக்கே திருப்பியளிக்கப்பட்டது.
இது பற்றியே இக்கல்வெட்டு விவரிக்கிறது. மேலும்
முரசூர் அஞ்ஞுற்றவர் முன்னிலையில் நிலம் திருப்பியளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓசூர் கி.பி பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு செவிடபாடி என்றும், முரசு நாடு என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment